अज्ञोऽयमात्म गुणलेश विवर्जितश्च तस्मादनन्यशरणो भवतीति मत्वा॥ २०
விஜ்ஞாபநம் யதி3த3மத்3ய து மாமகீநம் அங்கீ3குருஷ்வ யதிராஜ! த3யாம்பு3ராஷே |
அஜ்ஞோऽயமாத்ம கு3ணலேS விவர்ஜிதSQச தஸ்மாத3நந்யSரணோ ப4வதீதி மத்வா ||
பொருள்:
யதிராசனே! கருணைக் கடலே! நான் தத்வம், ஹிதம், புருஷார்த்தம் போன்ற உயர்ந்த உண்மைகளை அறியாதவன் என்றும், எவ்விதமான ஆத்ம குணங்களும் அற்றவன் என்றும் உணர்ந்து கொள்ளுங்கள். தேவரீருடைய கருணையையும், இரக்ஷகத்தையும் வேண்டும் என்னுடைய பிரார்த்தனையை ஏற்று அருள் புரிய வேண்டுகிறேன்.
விளக்கவுரை:
ஸ்வாமி மணவாள மாமுனிகள் மூன்றாவது பாசுரமான (வாசா யதீந்த்3ர! மநஸா வபுஷா ச யுஷ்மத்) என்ற பாசுரத்திலே தொடங்கி இதற்கு முந்தைய பாசுரம் வரை எம்பெருமானாரிடம் பல பிரார்தனைகளையும், விண்ணப்பங்களையும் செய்கிறார். இந்தக் கடைசிப் பாசுரத்திலே அந்தப் பிரார்த்தனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு அருள் புரியவேண்டுமென்று ஸ்வாமி இராமானுசரிடம் இறைஞ்சி யதிராஜ விம்ஸதியைத் தலைக்கட்டுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
1 comment:
aanmigakkadal said...
ur post is very useful to me.
by
www.aanmigakkadal.blogspot.com