तामन्वहं मम विवर्धय नाथ! तस्याः कामं विरुद्धमखिलं च निवर्तय त्वम्॥ १९
ஸ்ரீமந்! யதீந்த்3ர! தவ தி3வ்யபதா3ப்3ஜஸேவாம் ஸ்ரீஸைலநாத2 கருணாபரிணாமத3த்தாம்
தாமந்வஹம் மம விவர்த4ய நாத2! தஸ்யா: காமம் விருத்3த4மகி2லம் ச நிவர்தய த்வம்
பொருள்:
இராமானுசா! எம்பெருமானாரே! தங்களுடைய திருவடித்தாமரைகளின் தரிசனத்தை நாள்தோறும் பெற அருளவேண்டும். அந்த பாக்கியம் எனக்கு என்னுடைய ஆசாரியரான திருவாய்மொழிப் பிள்ளையின் அருளால் எனக்குக் கிட்டியது. என் ஆசாரியருக்கு என்மேல் உள்ள அபார காருண்யத்தினாலேயே எனக்கு அந்த பாக்கியம் கிட்டியது. தங்களுடைய திருவடி தரிசன பாக்கியத்திற்க்குத் தடையாக இருக்கும் யாதொறு ஆசையையும் விலக்க வேண்டுகிறேன்.
விளக்கவுரை:
ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய ஆசாரியரான திருவாய் மொழிப்பிள்ளையின் (ஸ்ரீஸைல நாதர்) விண்ணப்பத்தினாலேயே யதிராஜ விம்ஸதியை அருளிச்செய்தார். அந்த காரணத்தினாலேயே ஸ்வாமி இராமானுசரின் திருவடி தரிசனம் கிட்டியதாகவும், அந்த பாக்கியும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.
ஜீயர் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்