यः स्तुतिम् यतिपतिप्रसादनीं व्याजहार यतिराजविंशतिम्।
तं प्रपन्नजन चातकाम्बुदं नौमि सौम्यवरयोगि पुङ्गवं॥
ய: ஸ்துதிம் யதிபதிப்ரஸாதி3நிம்
வ்யாஜஹார யதிராஜவிம்Sதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்பு3த3ம்
நெளமி ஸெளம்யவரயோகி3 புங்க3வம் ||
பொருள்:
எம்பெருமானாருடைய திருவுள்ளத்தில் சந்தோஷத்தை உண்டாக்குவதற்காக “யதிராஜ விம்Sதி” என்ற இந்த பிரபந்தத்தை அருளிச் செய்த வரவர முனி என்ற திருநாமத்தையுடைய ஸ்வாமி மணவாள மாமுனிகளைத் தெண்டமிட்டு நமஸ்கரிக்கிறேன். எங்கனம் குளிர்ந்த சந்திரனின் கிரணங்கள் சாதகப் பறவைகளைப் பேணுகின்றனவோ, அங்கனம் ஸ்வாமி மணவாள மாமுனிகள், ப்ரபந்நர்களுக்காக ஸகல ஸாஸ்திரங்களின் அர்த்தங்களையும் அமுதெனப் பொழிந்துள்ளார்.
விளக்கவுரை:
சாதகப் பறவை மழை மேகங்களிலிருந்து பொழியும் நீரையே நேரடியாகப் பருகும். எவ்வளவு தான் நீர் வேறு எங்கு இருந்தாலும் அதைப் பருகாமல் கருத்த மழை மேகங்களுக்காகப் பொறுமையுடன் காத்திருந்து அந்நீரையே பருகும். அது போன்று ப்ரபந்நர்களும் எம்பெருமானின் கருணையையன்றி வேறு ஒன்றையும் எதிர் பார்த்திருக்கமாட்டார்கள். அத்தகைய ப்ரபந்நர்களுக்காக ஸ்வாமி மணவாள மாமுனிகள் எல்லா ஸாஸ்திரங்களின் அர்த்தங்களையும் அமுதெனப் பொழிந்துள்ளார்.
ஆசாரியன் திருவடிகளே சரணம்